Thursday, September 4, 2008

நட்பு

நீயும்
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை...

நீயும்
என்னை பார்த்ததில்லை..
நானும்
உன்னை பார்த்ததில்லை...

நீயும்
என்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை..
நானும்
உன்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை...

நீயும்
என் சந்தோஷங்களை கண்டதில்லை..
நானும்
உன் சந்தோஷங்களை கொண்டாடியதில்லை...

நீயும்
என் வருத்தங்களில்
என் கைகளை பிடித்து கொண்டதில்லை..
நானும்
உன் வருத்தங்களில்
உன் கைகளை பிடித்து கொண்டதில்லை...

நீயும்
எந்த மழை நாளிலும்
என்னோடு நடந்ததில்லை..
நானும்
எந்த மழை நாளிலும்
உன்னோடு நடந்ததில்லை...

நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை சொல்லவைக்கும்
ஒரு சின்ன நட்பு மட்டுமே..

அது
நான் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
உன்னையும்,
நீ சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
என்னையும்
நினைத்துக்கொள்ள செய்கிறது...

காதலர்கள் Vs நண்பர்கள்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் ......
"காதலர்கள்"

இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள் .........
"நண்பர்கள்"

இயந்திர வாழ்கை

கல்லுரி வாழ்வில் வட்டமிட்டு திரிந்து...
இயந்திர வாழ்வில் புகுந்து..
இயந்திரமாகி போன இளைஞர்களுள் நானும் ஒருவன்....

இது ஒரு விசித்திர உலகம்-அமாம்!
செல்லும் வழியில் இறைவனுக்கு நாகரீக முத்தம் கொடுக்கும் நூதன உலகம்....

கனவு ஒரு அற்புதபடைப்பு...
கனவுகள் இல்லாவிடில் என்றோ-மறைந்து
இருப்பேன் இவ்வுலகை விட்டு....

இன்னும் கனவில் வந்தாடும் ..என்
இனிமையான கடந்த காலம்...
அனைவரும் கடந்துவந்த ஒரு வசந்தகாலம்..

என்னுடைய கண்கள் களவு செய்ய பிறந்தவை....
வானத்து நிலவையும் ஒரு நொடிபொழுதில்!
தன்னுள் மறைத்து கொள்ளும்...

புரிந்து கொள்வதுதான் வாழ்கை .....
விரைவில் இந்த இயந்திர உலகையும் புரிந்து கொள்வேன்...

நண்பனின் உண்மையான பாசம்

சந்தித்து விட்டு பிரிகிற நேரம் !!
திரும்பி பார்க்கும் போதெல்லாம்
அழுகை வருகிறதாம் !!
அன்று முதல் திரும்பி
பார்ப்பதில்லை என
சத்தியம் செய்துவிட்டு
பிறிந்தோம்!
மறையும் கடைசி நொடியில் ....,
நீ பார்க்க மாட்டாயா என நானும் !
நான் பார்க்க மாட்டேன என நீயும் !
ஒன்றாய் திரும்பி பார்க்க பிறகு
வரும் கண்ணீர் துளிகளே !
*****நண்பனின் உண்மையான பாசம் ******