Tuesday, March 31, 2009

அவளை சந்தித்த வேளை


இதயம் இழந்த பின்னும்
உயிர் வாழ
இயலாதவனாய்
சவமாகிப்போனேன்
அவளை
சந்தித்த வேளையில்....

Thursday, March 26, 2009

"நிலவு"


பூமி முகம் கழுவுமுன்
வானக்கண்ணாடியில்
ஒட்டிவைத்த ஸ்டிக்கர் பொட்டு
"நிலவு".

நீ நிலவு


வானம்
எனக்கு
தரையில்தான்....
நீ
நிலவு என்பதால்!!!!!!

கவிதை நீதான்!


என் கவிதைகள் உனக்கு புரியாவிட்டாலும்,
இதை மட்டும் தெரிந்துகொள்!
அதிலெல்லாம் இருப்பது நீதான்!

காதல்.....VS நட்பு.......



காதலுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசம்......
நம் சிந்தும் கண்ணீரை வேடிக்கை பார்ப்பது
காதல்.....
அந்த கண்ணீர் கீழே சிந்துவதற்குள்
தாங்கி பிடிப்பது

நட்பு.......

கல்யாண விருந்து


கல்யாண விருந்து தான்
ஆனாலும்
கை நனைக்க முடியவில்லை
கண்கள் நனைந்தன........
காதலியின் திருமணம்......

நிலவை ரசிக்கும்


நிலவோடு நிலவாக நானும் தேய்கிறேன்
தினம் ஜன்னல் ஓரத்தில்
நிலவை ரசிக்க அல்ல
நிலவை ரசிக்கும் என்னவளை ரசிக்க!!!!!!!

கண்ணீர் துளியே!!!!!!


என் கன்னத்தை அடிக்கடி
தொட்டு பார்க்க உனக்கு மட்டும்
ஏன் இத்தனை ஆர்வம்
என் கண்ணீர் துளியே!!!!!!

Thursday, March 19, 2009

மூக்குத்தி


அகமிட்ட காதலின்
முகமிட்டு காட்டுது
சிவந்திட்ட சிறுமூக்கின்
சின்ன மூக்குத்தி.

நேசிக்க மறுக்கிறாய்!!!


இறைவனை நேசிக்கின்ற உன்னால்
அவன் படைத்திட்ட என்னை
மட்டும் ஏன் நேசிக்க
மறுக்கிறாய்!!!!

பைத்தியம்


பெண்ணே !
சிரித்தது நீ தானே ?
நான் ஏன் பைத்தியம் ஆனேன் ?????????

தாலி


உன் தாலி கயிற்றில் தூக்குப் போட்டு தொங்கும்
உன் கனவுகளை தொட்டு விட்டு சொல்.
என்னை மறந்து விட்டாயா?

வாழ்க்கையை நேசி



வளைந்து நெளிந்து செல்லும் பாதையை
காட்டிலும் வலி தரும் வாழ்க்கையே - சிறந்தது
அதனால் "வாழ்க்கையை நேசி வலியை அல்ல ".

வண்ணத்துபூச்சி



விரித்து காட்டும்போது
எவ்வளவு அழகு ...
வண்ணத்துபூச்சி தன் சிறகை!!!! .