Monday, May 18, 2009

மனசெல்லாம்
புன்னாகுவதர்க்
காதல் உருவாகக் கூடாது.....,,,,

மனசெல்லாம்
“பூ”வாக்குவதற்காக
காதல் உருவாக வேண்டும்......!

Thursday, May 7, 2009

******அன்னை*****



உலகில் எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும்
உன்னை எனக்குத் தோழியாகத் தந்த
"உன் அன்னை" தான்
எனக்கு முதற்கடவுள்...

Monday, May 4, 2009

கர்வம்



உனக்கு பிடித்ததை
கொடுத்து உன்னிடத்தில்
பழக்கம் பிடிக்கலாமென்றால்
உனக்கு கர்வமெல்லவா பிடித்திருக்கிறது

Friday, May 1, 2009

நட்பு


அமைதியான இரவு..

சில்லேன்ற காற்று..

அலைகளின் தாளம்..

படகு மறைவில் காதல் ஜோடிகள்..

இருவர் மட்டும் வெட்டவெளில்..

அவன் தோளில் அவள் தலை சாய்ந்து

விசும்பி கொண்டு இருக்கிறாள்..

சமுகம் அவர்களை கேலி செய்தது

கள்ள காதல் என்று..

எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணிர்

ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!

உலகத் தொழிலாளர்களுக்கு மேதின வாழ்த்துக்கள்


8 மணி நேர வேலைக்காக சிக்காகோவின் வீதிகளில்
தொழிலாளர்கள் சிந்திய ரத்தத்தின் நினைவாக
கொண்டாடப்படும்
உலகத் தொழிலாளர்கள் தினம் மே 1
அன்று
புரட்சிகர தலைவர்களின் பாதையில்
தமிழ்த் தேசிய விடுதலைக் காண அணிதிரள்வோம்..

உலகத் தொழிலாளர்களுக்கு மேதின வாழ்த்துக்கள் !
-----------------------------------------------------------

"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -

Friday, April 17, 2009

நான் ஊமை


உன்னுடன் பேச முடியாத நேரத்தில்
நினைத்து கொள்வேன்
நான் ஊமை என்று
ஏக்கத்தில்......

Tuesday, April 14, 2009

நிஜம் நிழலாகி!!!!


நிஜத்திற்க்கும் நிழலிற்க்கும்
வித்தியாசம் தெரியவில்லை – எனக்கு
காரணம் சிலசமயம் நிஜம் கூட
நிழலாகி போவதனால்...!

Monday, April 13, 2009

குழந்தையின் முத்தமே

சிவந்து சரியும்
கோப முகத்தையும்....,
கனத்து கதறும்
சோக மனதயும்.-மாற்றும் மருந்து
குழந்தையின் முத்தமே!!!!

Wednesday, April 1, 2009

முட்டிய வெடிப்பிது

இதயம் வெடித்த வடிவம்
இரு முகம்போல் தெரிகிறதே
கவிதை வடித்த விதமோ
பல கருத்தை தருகிறதே
முட்டாள் தினத்தில்-ஒரு
முத்தான கவிதை- தமிழ்
அடுக்கு வரிகளில் அமைந்ததன்றோ.

Tuesday, March 31, 2009

அவளை சந்தித்த வேளை


இதயம் இழந்த பின்னும்
உயிர் வாழ
இயலாதவனாய்
சவமாகிப்போனேன்
அவளை
சந்தித்த வேளையில்....

Thursday, March 26, 2009

"நிலவு"


பூமி முகம் கழுவுமுன்
வானக்கண்ணாடியில்
ஒட்டிவைத்த ஸ்டிக்கர் பொட்டு
"நிலவு".

நீ நிலவு


வானம்
எனக்கு
தரையில்தான்....
நீ
நிலவு என்பதால்!!!!!!

கவிதை நீதான்!


என் கவிதைகள் உனக்கு புரியாவிட்டாலும்,
இதை மட்டும் தெரிந்துகொள்!
அதிலெல்லாம் இருப்பது நீதான்!

காதல்.....VS நட்பு.......



காதலுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசம்......
நம் சிந்தும் கண்ணீரை வேடிக்கை பார்ப்பது
காதல்.....
அந்த கண்ணீர் கீழே சிந்துவதற்குள்
தாங்கி பிடிப்பது

நட்பு.......

கல்யாண விருந்து


கல்யாண விருந்து தான்
ஆனாலும்
கை நனைக்க முடியவில்லை
கண்கள் நனைந்தன........
காதலியின் திருமணம்......

நிலவை ரசிக்கும்


நிலவோடு நிலவாக நானும் தேய்கிறேன்
தினம் ஜன்னல் ஓரத்தில்
நிலவை ரசிக்க அல்ல
நிலவை ரசிக்கும் என்னவளை ரசிக்க!!!!!!!

கண்ணீர் துளியே!!!!!!


என் கன்னத்தை அடிக்கடி
தொட்டு பார்க்க உனக்கு மட்டும்
ஏன் இத்தனை ஆர்வம்
என் கண்ணீர் துளியே!!!!!!

Thursday, March 19, 2009

மூக்குத்தி


அகமிட்ட காதலின்
முகமிட்டு காட்டுது
சிவந்திட்ட சிறுமூக்கின்
சின்ன மூக்குத்தி.

நேசிக்க மறுக்கிறாய்!!!


இறைவனை நேசிக்கின்ற உன்னால்
அவன் படைத்திட்ட என்னை
மட்டும் ஏன் நேசிக்க
மறுக்கிறாய்!!!!

பைத்தியம்


பெண்ணே !
சிரித்தது நீ தானே ?
நான் ஏன் பைத்தியம் ஆனேன் ?????????

தாலி


உன் தாலி கயிற்றில் தூக்குப் போட்டு தொங்கும்
உன் கனவுகளை தொட்டு விட்டு சொல்.
என்னை மறந்து விட்டாயா?

வாழ்க்கையை நேசி



வளைந்து நெளிந்து செல்லும் பாதையை
காட்டிலும் வலி தரும் வாழ்க்கையே - சிறந்தது
அதனால் "வாழ்க்கையை நேசி வலியை அல்ல ".

வண்ணத்துபூச்சி



விரித்து காட்டும்போது
எவ்வளவு அழகு ...
வண்ணத்துபூச்சி தன் சிறகை!!!! .

Friday, January 23, 2009

!!!!!!!!!*******அன்பு ******!!!!!!!!!!!


பார்த்து கொண்டிருக்கும்
நிமிடங்களை விட
நினைத்து கொண்டிருக்கும்
நிமிடங்களில் தான்
அன்பு அதிகமாக இருக்கும்

Thursday, January 22, 2009

!!!--உன்னை வெட்கப்படுத்துகிறேன்--!!


ஏற்கனவே அழகாக
இருக்கும் உன்னை
மேலும் அழகாகக்கத்தான்
உன்னை வெட்கப்படுத்துகிறேன்
தெரியுமா..?

Wednesday, January 21, 2009

!!** வலி **!!



பேச யாருமில்லாத போது
நினைவுகளே துனையாகி
வலிகளைச் சுமக்கின்றேன்...

Tuesday, January 20, 2009

அழகாய்!!


உலகத்தில் மிகவும் உபயோகமற்ற செயல்
எது தெரியுமா?
உன்னை விடவும் அழகாய்
ஒருத்தியை தேட முயற்ச்சிப்பதுதான்।

உன் நெற்றி பொட்டாக!!!!!!!!!!!!!!!


உன் நெற்றிக்குகாக
ஆயிரம் நட்சத்திரங்கள்
தவம் கிடக்கின்றன
வானத்தில்
உன் நெற்றி பொட்டாக
வருவேன் என்று.................

மழை மேகமா!!!!!!!!!!!


நீ என்ன மழை மேகமா
உன்னுள் சிதறி கிடக்கின்ற
தண்ணீர் துளிகளை
ஒன்றாக்கி மழை தருவது போல்
என்னுள் சிதறிக்கிடந்த
வார்த்தைகளை ஒன்றாக்கி
கவிதை தந்தாயே......

Monday, January 19, 2009

@@@--!!!வெட்கம்!!!--@@


நான் பார்க்கும்போது வெளிப்படும்
வெட்கங்களையும் மற்றவைகளையும்
நீ மறைக்கபடும் பாடு இருக்கிறதே
உன் வெட்கங்களைவிட
அவை மிக அழகாக இருக்கின்றன
...

Sunday, January 18, 2009

தோட்டத்தில் மொட்டுக்ளாய்!!!!!!!!!!!!


என் நினைவு என்னும் தோட்டத்தில்
மொட்டுக்ளாய் காத்துகிடக்கின்றன
என் கவிதைகள்
உன் வாசிப்பில் மலர்வேன் என்று....

Saturday, January 17, 2009

அழுகுரல்!!


கேட்கிறது
குழந்தையின் அழுகுரல்!!
பார்க்கும்
மனது பதறுகிறது!!
தொலைக்காட்சி பெட்டி!!

Friday, January 16, 2009

காதணிகள்


உன் காதுகளும்
கதை சொல்லுமோ?
காதணிகள்
தலையசைக்கின்றனவே!

Thursday, January 15, 2009

ஆசைப்படவில்லை!!!!!!!!!!!!!!


நான் அரியாசனம் ஏற
ஆசைப்படவில்லை
வரலாற்றில் இடம் கேட்டும்
வருத்தப்படவில்லை
நான் கேட்கும் இடம்மெல்லாம்
உன் இதயத்தின் ஒரு ஓரம் தான்...

Wednesday, January 14, 2009

ஒன்றும் தெரியாது!!!!!!!!!!!!!


நீ விரும்பும் உயிருக்கு
உன் அன்பு புரியாது.
உன்னை விரும்பும் உயிருக்கு
உன்னை தவிர வேற
ஒன்றும் தெரியாது ......

Tuesday, January 13, 2009

***தோழியே ஆசையடி****


தோழியே உன் தோழோடு
தோள் சாய்ந்து நிலவின் ஒளியில்
உன் செல்லச் சிரிப்போடு
இரண்டறக் கலந்திட
ஆசையடி

Monday, January 12, 2009

!!** நினைவுகள் **!!


விழித்திருக்கையில் தென்றலாய்
தழுவி உறங்குகையில்
கனவென மாறி
என்னை அணைத்திடும்
உன் நினைவுள்....!!

Sunday, January 11, 2009

ஓவியம்!!!!!!!!!!!!!



மணல் ஓவியங்கள் -
மண் மீது படியும்
உன் கால்தடங்கள்

Saturday, January 10, 2009

காதல் புனிதமானதே!!!!!!!!!!!!!!


என் ஆவி பிரியும்
முன் நொடியில் சொன்னாலும்
உள்ளம் புரிந்து வரும்
உன் காதல் புனிதமானதே!!!!!

Friday, January 9, 2009

நிரப்ப நினைக்கிறேன்!!!!!!!!!!!!


என் கவிதையெனும்
சிறுதுளியால் நான்
நிரப்ப நினைக்கிறேன்
கடலெனும் உங்கள் மனதை!!!!!!

Thursday, January 8, 2009

உருவத்தை மறக்க முடியவில்லை!!!!!!!!!!!!



உருவத்தை பார்த்த அவள்
என் உள்ளத்தை பார்க்க
மறந்து விட்டாள்
அவள் உள்ளத்தை பார்த்த
என்னால் அவள் உருவத்தை
மறக்க முடியவில்லை.....

Wednesday, January 7, 2009

உன் கொலுசு ஓசையே

எனக்கு பிடிக்கும் கோவில்
மணியோசையைவிட
உன் கொலுசு ஓசையே
எனக்கு பிடிக்க்கும்
சம்பிரதாயங்கள் இல்லாத
சத்தம் அது

Tuesday, January 6, 2009

என் உயிரை எடுக்கும் உரிமை!!!!!!!!!!!!

எமனுக்கு தான்
என் உயிரை
எடுக்கும் உரிமை
என்று நான்
நினைத்து இருந்தேன்
உன் கண்களை
பார்க்கும் முன்பு வரை!!

Monday, January 5, 2009

காதலும் கவிதையும் இல்லையென்றால்!!!!


காதலும் கவிதையும்
இல்லையென்றால்
இந்த பூமிப்பந்து என்றோ
வெறி பிடித்த
மனித மிருகங்களால்
சிதைக்க பட்டிருக்கும்.....

Sunday, January 4, 2009

கவிதை நினைக்கும் போது!!!!!!!!!!!!


கண்களை முடிக்கொண்டு
கவிதை பற்றி நினைக்கும் போது…
கண்முன் வருவது கவிதையல்ல….
உன் முகம் தான்…

Saturday, January 3, 2009

காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை....


காதல் இல்லாமல்
வாழ்கையில்
சுவாரஸ்சம் இல்லைத்தான்
ஆனால்-காதல் மட்டுமே
வாழ்க்கை இல்லை....

Friday, January 2, 2009

காதல் பரீட்சை....


தோற்றுப்போய்
விடுவேனோ
எனப் பயந்தே
காதல் பரீட்சையை
எழுத விரும்பவில்லை..

காதல் ஒன்றும் பரீட்சையல்ல



தோற்று போவதற்கு
காதல் ஒன்றும் பரீட்சையல்ல...
ஒருமித்த- இரு இதயங்களின்
சங்கீத பாஷை !

Thursday, January 1, 2009

ஒற்றை ரோஜா


நீ
முதன் முதலாய்
நீட்டிய ஒற்றை ரோஜா
எனக்கு அறிமுகப்படுத்தியது
காதலை மட்டுமல்ல
என்னையும் தான்....