Thursday, September 25, 2008

மலரே.. உனை போல் இருக்க ஆசை..



ஒவ்வொரு நாளும் புதிதாய்
மலரும் புதுமலராய்,

ஓர் நாள் வாழ்க்கையிலும்
உல்லாசம் பொழியும் அழகு மலராய்,

காற்றின் இசைக்கு அசைந்தாடி
தலையாட்டும் பனிமலராய்,

மென்மையான இதழ்கள் கொண்டு
பெண்மை பாராட்டும் வண்ணமலராய்,

காதலர் கைகளில் தவழ்ந்தாடும்
கன்னி மலராய்,

கல்லறையில் உறங்குபவரை
அமைதிப்படுத்தும் கருணைமலராய்,

இதழ்கள் விரித்து பற்கள் காட்டாது
சிரிக்கும் மழலைமலராய்,

பூஜையறைக்குள் இறைவன் காதில்
துதிபாடும் பக்திமலராய்,

வெற்றியின் போது தோள்களை
த்ட்டிக்கொடுக்கும் மாலைமலராய்,

திருமணத்தில் இணையும் இருமனங்களின்
அருகில் மணமலராய்,

ஒரு நாள் மட்டுமே வாசமும் சுவாசமும்
கொண்ட நேசமலராய்,

ஊருக்கே உதவும் உனைப்போல,
பல நாள் வாழும் மனிதர்க்கூட்டமும்
வாழ்ந்து விட்டால் அன்றே விடியல் என்னன்பு மலரே!!!