Friday, November 28, 2008
குண்டுவெடிப்பு
"இன்றைய குண்டுவெடிப்பு
சேதம் குறைவுதான்
ஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள்"
அலட்சியமாய் சொல்லும்
அரசாங்கத்திற்குத் தெரியுமா?
பிணத்தின் முன்
கதறிக்கொண்டிருக்கும்
குழந்தையின் துயரம்
Wednesday, November 26, 2008
Tuesday, November 25, 2008
ரசனை
குமுறல்
Saturday, November 22, 2008
துன்பம்
நான் தவிக்கிறேன் !!!
கருப்பு வானவில்
தெரியவில்லை!!!!!!
சிறு வித்தியாசம் தான்....
Tuesday, November 18, 2008
Friday, November 14, 2008
வறுமை !!!
Thursday, November 13, 2008
Wednesday, November 12, 2008
கல்லூரி கடைசி நாள்
வருடக்கணக்காய் பேசிய பேச்சுகளை
எல்லாம் கூடவே அழைத்து வருகிறது
என்றேனும் வரும்
ஒற்றை குறுந்தகவல்
பல இதயங்களின் கவிதைகளை
சுமந்திருக்கும் கவிதைப் புத்தகம்
வகுப்பறை மேசை
வேவ்வேறு திசைகளில் இதழ்களாய் விரிந்தாலும்
இணைந்தே இருக்கின்றோம்
"நட்பு" என்னும் ஒற்றைக் காம்பில்
இன்னும் உலராமலேயே இருக்கிறது
கடைசியாய் நீ
உயிர்தொட்டு எழுதிய
நினைவேடு
கல்லூரி கடைசி நாள்
பறவைகளின் கூட்டில்
சலசலப்பு
இப்பொழுதும் கல்லூரிப் பேருந்தைப்
பார்க்கும் போதெல்லாம்
தேடத் தொடங்கிவிடுகின்றன
தோள்கள் தலை சாய்த்து
உறங்கிய தோழியை!!!
பெற்றோர் இட்ட பெயரும்
அந்நியமாய்த் தெரிகிறது
தோழிகள் சூட்டிய
செல்லப் பெயரில்!!!
Tuesday, November 11, 2008
கல்லூரி கடைசி நாள்...
விடைபெறுகின்றன பட்டாம்பூச்சிகள்!
கற்பித்தவனை கண்டு ஆசி பெற்றன!
கண்டித்ததையும் தண்டித்ததையும் மறந்து.....
நெஞ்சிலே,
வலிக்கும் வலிகளோடும்!
கண்களிலே,
துளிர்க்கும் துளிகளோடும்!
உருவங்களுக்கு இடையில் புருவங்கள் சுருக்கி,
தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்!
பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில!
கையெழுத்துகளில்,
இனிக்கும் நினைவுகளை கலந்து எழுதின -எல்லா
மின்மினி பூச்சிகளும்!
பனிப் போரிலிருந்த புறாக்கள்
பலவும் சமாதானமாகின..
இனிப் பாரிலெந்த பகையுமின்றி
உலவுமிந்த சமாதான புறாக்கள்!
நேற்றுவரை
அழகிய நட்பை சுமந்து அலைந்தோம்!
நாளை முதல்
பழகிய நினைவுகளை சுமந்து அலைவோம்!
நாம் சுற்றித் திரிந்து தேன் குடித்த மலர்வனம்
நாளை பறக்க இருக்கும் பட்டுப்பூச்சிகளுக்காய்..
மனம் வீசும்......
அந்த வனத்தில் வீசிய மனம்
நம் மனதில் வீசும் தினம்...
கற்பித்தவனை கண்டு ஆசி பெற்றன!
கண்டித்ததையும் தண்டித்ததையும் மறந்து.....
நெஞ்சிலே,
வலிக்கும் வலிகளோடும்!
கண்களிலே,
துளிர்க்கும் துளிகளோடும்!
உருவங்களுக்கு இடையில் புருவங்கள் சுருக்கி,
தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்!
பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில!
கையெழுத்துகளில்,
இனிக்கும் நினைவுகளை கலந்து எழுதின -எல்லா
மின்மினி பூச்சிகளும்!
பனிப் போரிலிருந்த புறாக்கள்
பலவும் சமாதானமாகின..
இனிப் பாரிலெந்த பகையுமின்றி
உலவுமிந்த சமாதான புறாக்கள்!
நேற்றுவரை
அழகிய நட்பை சுமந்து அலைந்தோம்!
நாளை முதல்
பழகிய நினைவுகளை சுமந்து அலைவோம்!
நாம் சுற்றித் திரிந்து தேன் குடித்த மலர்வனம்
நாளை பறக்க இருக்கும் பட்டுப்பூச்சிகளுக்காய்..
மனம் வீசும்......
அந்த வனத்தில் வீசிய மனம்
நம் மனதில் வீசும் தினம்...
காதலிக்குப்பின் தாய்..!!!
Monday, November 10, 2008
எப்போதடா வருவாய்.......??
காலைப்
பனித்துளியாய்
நான்
முயலாய்
எனைக் குடிக்க.....!!
*
காற்று தொடாத
மூங்கிலாய்
நான்
புல்லாங்குழலாய்
எனை மாற்ற......!!
*
பாதம் படாத
புல்வெளியாய்
நான்
என்னில்
மழையாய் பொழிய......!!
*
வளராத
நிலவாய்
நான்
என்னை
பௌர்ணமியாய்
ஒளிரச்செய்ய......!!
*
சிப்பி தொடாத
மழைத்துளியாய்
நான்
என்னை
முத்தாக்க.......!!
*
பறக்கத்துடிக்கும்
புறாவாக
நான்
என்
சிறகைக் கோதிவிட......!!
*
நானாகவே
இன்னும்
நான்
என்னில்
உன்னை
இட்டு நிரப்ப
எப்போதடா வருவாய்.......??
**
Saturday, November 8, 2008
என்னவள்
Friday, November 7, 2008
Thursday, November 6, 2008
ஓவியம்
Wednesday, November 5, 2008
Tuesday, November 4, 2008
உணர்வு
Subscribe to:
Posts (Atom)