Wednesday, October 15, 2008

சாலை விபத்து..


கண்ணாடிச் சில்லுகளுடன்
சிதறிக் கிடப்பது
அவனது கனவுகளும்
அவர்களது வாழ்வின்
அஸ்திவாரமும்…

சுயநலவாதி


பொதுநலமாய் வாழ்ந்த நான்…
உன்னை நேசித்த பின்
முழு சுயநலவாதியாகி விட்டேன்…
நீ சுவாசிக்கும் மூச்சுக் காற்றும்
எனக்குதான் எனக்கு மட்டும்தான்
வேண்டுமென்று…

ஊடல்...



சின்ன சின்ன சண்டைகாக
நீ என்னை ஆயிரம்
முறைகாயப்படுத்துகிறாய்...

உண்மையை தெரியாமலே,
என்னுள் இருப்பது
நீ என்பதை அறியாமல்...

எப்பொழுது நீ
என்னை புரிந்துக்கொள்வாய்...
எனக்கு எல்லாமே நீதான்யென்று....