Friday, October 3, 2008
மரம்
வெயிலில் வருவோருக்கு
நிழல் தருகிறாய்
வேர்வையில் நனைந்தோர்க்கு
பேன் ஆகிறாய்
ஏழை வீட்டு எரிபொருளாய்
விறகு ஆகிறாய்
மாடி வீட்டு மரசாமானுமாகி
மாற்றமும் பெறுகிறாய்
வாய் ருசிக்க பசி போக்க
கனி தருகின்றாய்
நோய்கள் தீர்க்க மனிதர்க்கு
மருந்தும் தருகிறாய்
பலனேதும் பாராமல்
பல உதவி செய்வதனால்
நிலவுலக மனிதர்கள் எல்லாம்
நீண்ட காலம் வாழ்கின்றனர்
Subscribe to:
Posts (Atom)