Wednesday, December 24, 2008

கிறிஸ்துமஸ்


இருப்பிடங்கள் படைத்திட்ட
இறைவனுக்கு,
பிறப்பிடம் தந்திட
இயலவில்லை.
பெத்லகேம் இதயங்களுக்கு!

மன்னனும் விரும்பவில்லை
மாளிகையில் பிறந்திட;

அன்று
வாட்டும் குளிரிலே
மாட்டு தொழுவத்திலே
பிறந்திட்ட தேவன்

இன்று
நம் இதயங்களில்
பிறந்திடும் இந் நந்நாளே
கிறிஸ்துமஸ்!!

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!

ஈரிதழ் ரோஜா நீ!!!!!!!!!!!!!!!


மெய் எழுத்துகள் எல்லாம்
உயிர் பெற்று விடுகின்றது
ஈரிதழ் ரோஜா நீ
உச்சரித்திட.....