Tuesday, September 30, 2008
அம்மா
Monday, September 29, 2008
காயபடுத்துவாள்!!! மருந்திடுவாள்!!
முயற்சித்துபார்!!!!
பொறாமைபடாதே!!!!! சிந்தித்து பார் !!!!
Saturday, September 27, 2008
ஒரு பதில் சொல்லு
எனக்கு நண்பனாக கிடைக்க
வெளிச்சம் வந்து வானம் விடிந்தாலும் !
மனதில் ஏனோ ஒரு வருத்தம் !
கனவுகள் யாவும் ஏன் கையில் இருந்தாளும்!
ஏன் எனக்கும் மட்டும் இந்த தடுமாற்றம்
வாழும் வாழ்கையில் ஒரு கேள்விகுறி !
பதில் தெரியாதா கேள்விகளில் !
மனம் தடுமாறும் நேரத்தில் !
இங்கே உன்னதனமான உன் நட்பு என்னும் பந்தத்தில்
நான் என்னை மறந்து கண்கள் மூடி கனவு காண !
என்ன வித்தை செய்தாய் நண்பனே !
நீஙகள் எனக்கு நண்பனாக கிடைக்க .......
என் அன்புத் தோழி!!!
Friday, September 26, 2008
வாடிகின்றோம்
Thursday, September 25, 2008
மலரே.. உனை போல் இருக்க ஆசை..
ஒவ்வொரு நாளும் புதிதாய்
மலரும் புதுமலராய்,
ஓர் நாள் வாழ்க்கையிலும்
உல்லாசம் பொழியும் அழகு மலராய்,
காற்றின் இசைக்கு அசைந்தாடி
தலையாட்டும் பனிமலராய்,
மென்மையான இதழ்கள் கொண்டு
பெண்மை பாராட்டும் வண்ணமலராய்,
காதலர் கைகளில் தவழ்ந்தாடும்
கன்னி மலராய்,
கல்லறையில் உறங்குபவரை
அமைதிப்படுத்தும் கருணைமலராய்,
இதழ்கள் விரித்து பற்கள் காட்டாது
சிரிக்கும் மழலைமலராய்,
பூஜையறைக்குள் இறைவன் காதில்
துதிபாடும் பக்திமலராய்,
வெற்றியின் போது தோள்களை
த்ட்டிக்கொடுக்கும் மாலைமலராய்,
திருமணத்தில் இணையும் இருமனங்களின்
அருகில் மணமலராய்,
ஒரு நாள் மட்டுமே வாசமும் சுவாசமும்
கொண்ட நேசமலராய்,
ஊருக்கே உதவும் உனைப்போல,
பல நாள் வாழும் மனிதர்க்கூட்டமும்
வாழ்ந்து விட்டால் அன்றே விடியல் என்னன்பு மலரே!!!
Wednesday, September 24, 2008
கவிதைகள் அனைத்தும் அருமை
**************************
நீ விலகி செல்கிறாய்
ஓர் அனுமதி கொடு
உன் நிழலாவது
என் மீது விழட்டும்..!
தேடினேன்....!
*******************
உன்னை தேடினேன்
கண்டு பிடித்தேன்
அடுத்தவனின் மணமாலைக்குள்
அகப்பட்டவளாய்.....!
விழுந்தது எப்போது...!
***************************
எனது தெருப்பள்ளங்களை
கடந்து சென்ற நான்
உன் இதயக்குழியில்
விழுந்தது எப்போது...!
முத்தம்.........!
*********************
அவளின் உதட்டு ஈரம்
அச்சனது - என்
இதழில் அல்ல
என் இதயத்தில்....!
காதல் என்றால்.....!
**************************
சூரியன் என்றால்
உதிப்பதும், மறைவதும்..!
நிலவு என்றால்
இரவு, குளிர்ச்சியும்...!
கவிதை என்றால்
வார்த்தையும், வாழ்க்கையும்..!
காதல் என்றால்
எமாற்றுவதும்
ஏமாறுவதும் தானோ...!
உனக்காக....!
*********************
உனக்காக பல
பழக்கங்களை விட்டுக்கொடுத்த - நான்
இப்போது என்னையும் விட்டு
கொடுக்கிறேன் உனக்காக...!
கவிதை வற்றாது...
*********************
சூரியன் உள்ளவரை
பகல் வற்றாது!
நிலவு உள்ளவரை
இரவு வற்றாது!
வானம் உள்ளவரை
பூமி வற்றாது!
காலம் உள்ளவரை
காதல் வற்றாது!
காதல் உள்ளவரை
கவிதை வற்றாது...!
மரணம்...!
***********************
சில நிமிடம்
இதயம் நின்றுவிடுகிறது
நீ - மற்றவர்களிடம்
விளையாடும் போது....!
பொறுமை..!
*******************
பெண்ணே
உனக்கு இவ்வளவு
பொறுமை கூடாது! - உன்
காதல் கடிதத்தை
என் கல்லறைக்கா
கொண்டு வருவது....!
நினைவு தடங்கள்...!
************************
கடற்க்கரையில் உள்ள - நமது கால் தடங்களை
அழிக்க போராடி கொண்டிருக்கிறது
கடல் அலை..!
அதற்க்கு ஏப்படி தெரியும் அவை
கால் தடம் இல்லை - நம்முடைய
நினைவு தடம் என்று..!
கள்ள சிரிப்பு
ஊமை
Tuesday, September 23, 2008
அனாதை இல்லை
கண் இமை
Monday, September 22, 2008
இதயத்தை தேடி...
நட்பு
இதயமற்ற பெண்
என் தாயே
அம்மா
Saturday, September 20, 2008
ஆயிரம் கவிதை
*********
அன்பை பற்றி படிக்கும் போதெல்லாம்
கண்ணுக்கு தெரிவது
அம்மாவின் முகம் மட்டும்
மறந்து போனேன்
******************
ஒ நான் பார்வையற்றவன்
என்பதே மறந்து போனேன்
உன் பேரு தான்
வெளிச்சமோ
Friday, September 19, 2008
கவிதைகள் உங்கள் பார்வைக்கு…
*******
ஆண்பால்
பெண்பால்
பொதுவானது
நட்பால் . . .
அன்னை இதயம்
******************
யார் யாரோ அணைத்து மகிழ்ந்தாலும்
அனைத்தும் கொடுத்தாலும்
இறுதியில் அன்னையைத் தேடும்
சிறு குழந்தை போல்
உன்னையே தேடுகிறது இதயம் …
பொன்மொழிகள்
பிறக்கின்றன. -நபிகள் நாயகம். *
*தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய
பலவீனம். -சிம்மன்ஸ் *
*உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும். -மான்ஸ்பீல்டு.** *
*நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து
கொள்வது அவசியம். -அன்னை தெரசா.*
*எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல
செயல்கள் எதையும் செய்ய முடியாது. -ஜேம்ஸ் ஆலன்.*
*மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய
சுமையாகிவிடும். -பெர்னார்ட்ஷா.*
*இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில்
உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது. -ஸ்ரீசாரதாதேவி. *
*மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
-சாணக்கியர். *
*நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை
மேற்கொள்கிறான். -ஜான்மில்டன்.*
*உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்
உணர்வதில்லை. -வோல்டன். *
*அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். -ஜெபர்சன்.*
குடும்பம்-----அப்பா
குடும்பம் --அம்மா
குடும்பம்-----அம்மா
********************
என்னை இந்த உலகுக்கு
அறிமுகபடுத்தியவள் . . .
என் முதல்
தோழியும் கூட . . .
என் செல்ல குறும்புகளை
செல்லமாய் திட்டியபடி
ரசிப்பவள் . . .
இந்த உலகத்தில் ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென இறைவன் சொன்னால்
இவள் தான்
என் இனிய துணை . . .
அம்மாவின் அன்புக்கு - இணை
என்றுமே
உலகில் இல்லை . . .
Thursday, September 18, 2008
புன்னகை அழகாய் இருக்கிறது
கண்ணிருக்கு காரணம்
நட்பிற்கு இல்லை பயம்
அழகாய் அறிவாய்
ஒருவன் இருந்து விடுவானோ
என்கிற பயம் நல்லவேளை
***நட்பிற்கு இல்லை ***
காலை வணக்கம்
http://sunkavithai.blogspot.com
அம்மா
அன்பை பொழியும் அம்மா
அவள் தரும் அன்னத்திலே
ஆயுள் இருக்குமே
கை மணக்கும் கத்திரிக்காய் சாம்பாரிலே
மெய் மணக்கும் நெய் வகை சாப்பிட்டிலே
சத்து தரும் கார வகை பொறியிலே
நமக்கு நன்மை தருமே
மெதுவடை காத்து இருக்கும் கடைசியிலே
காரவடை நிரந்து இருக்கும் இலைதனியிலே
பாயாசம் பதுங்கி இருக்கும் பாத்திரத்திலே
நெய் சாப்பாடு ஒளிந்து இருக்கும் குக்கரிலே
அத்தனையும் கிடைக்கும் சும்மாவே
அதனோடு முத்தமும்
அன்னை தரும் அன்னத்தை
ஒரு முறை ருசித்தால்
ஆயுள் முழுவதும் மணக்கும்
தாமதம் வேண்டாம்
மறதி வேண்டாம்
அதை உதிக்க மறக்காத உதயசூரியனிடம்
கற்று கொள்ளுங்கள்
எம்மதமாயினும் பரவாய்இல்லை
தாமதம் வேண்டாம்
கவிதை அருமை. அருமையான வரிகள்
தோடுகளையும், வளையல்களையும்
கழற்றி வைப்பதை போல்
உன் சிறகுகளை
எங்கே கழற்றி வைப்பாய்
*****************************************
புல்லின் மீதிருக்கும் பனித்துளியை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
உன் ஈரம் படிந்த இதழ்களை
*****************************************
கொஞ்ச நேரம் பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!
*****************************************
தனியே நீ முணுமுணுக்கும் இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில் இனிமை இழப்பதேன்?
*****************************************
என் மனம் அழும் வேளையில்
உள் இருக்கும் நீ நனைவாய் என்று தயக்கம்
முத்தமிடாதே
நிழல்கள் வெட்கப்படுகின்றன.
*******************************
இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்
*******************************
நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.
*******************************
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை
*******************************
உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
*******************************
விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்.
*******************************
என் கண்களைக் கட்டிப்பிடித்து
உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
‘கண் கட்டி வித்தை’யா?
*******************************
நீ கண்ணாடி
அறியாமல் சொன்னால் அம்மா
நீ என் வீதியை தினமும் கடப்பதை அறியாமல் !!!
வாய் ஓயாமல் பேசும் பெண்கள்
வாயாடி என்றால் ….
நீ கண்ணாடி !!!
என் கவிதைகள்!
சேலையென உடுத்திக் கொள்கின்றன
என் கவிதைகள்!
உன்னோடு நான் இருக்கையில்
உலகின் பரப்பளவு
சில சதுர அடிகள்
விரலசைத்து நீ பேசும்போது
காற்று ஓர் வீணை!
காத்திருக்கிறேன்
கைகளின் பின்னால்
உனக்கான மலர்களை
மறைத்துவைத்தபடி
காத்திருக்கிறேன்
ஒரே நேரத்தில் நிகழலாம்
இரு திறப்புகள்
கனவுலகம்
வேதனை கலந்த மூடுபனியில்
முக்காடிட்டுக் கொண்டிருக்கிறது
அந்த வேதனைத் தீயில் தான்
என் கவிதைகள் எழுகின்றன
அதுவே என் கனவுலகம் !
********* நட்பு *******
உடன் பிறப்பாய் எண்ணி அன்பு காட்டுவது நட்பு !!
தடை விதிபோரை தட்டிகழிப்பது நட்பு !
மனஸ்தாபம் ஏற்பட்டால் மனம் விட்டு பேசுவதும் நட்பு !!
புதுமையான நட்பு பொக்கிஷம் போன்றது ....
நட்பை சேகரித்து கொள் நண்பா ..........!
காதலும் Vs நட்பும்
இந்த வாழ்க்கையில்...
காதலும், நட்பும்
இரு கவிதைகள் .
அதில்
அன்பான காதலை நேசிப்போம் ...
அழகான நட்பை சுவாசிப்போம்
Wednesday, September 17, 2008
தாஜ்மஹால்
நிறுத்தப்பட்ட சிறுமி படிப்பு
படிப்பு
நிறுத்தப்பட்ட
சிறுமி பார்க்கிறாள்
பள்ளியை...
வெட்டப்பட்ட
கிளையொன்று
மரத்தின் பசுமையை
பார்ப்பதைப் போல...
வறுமை
சந்தோசம்
துன்பங்களுக்கிடையே ,
வரும் "சந்தோசம் "
என்றால் .....
நட்பே ....அது உன் மறு பெயரா ....?
Monday, September 15, 2008
கண்ணீர்
மனித கண்ணீர்க்கு அணை கட்ட தெரியாது
கரையாத மனதையும் கரைக்கும் சக்தி
கண்ணீர்க்கு உண்டு
கடலை விட இந்த கண்ணீர்க்கு மதிப்பு அதிகம்
ஆனால் கடலை விட அளவு குறையது
இந்த கடலுக்கு பொருளை கரைக்க தான் தெரியும்
மனதை கரைக்க தெரியாது
கடலுக்கு கரை கண்டவன் உண்டு ஆனால்
கண்ணீர்க்கு கரை கண்டவர் எவரும் இல்லை
Friday, September 12, 2008
மழை
எனக்காக என்னுடன் அழுதபோது
அதே மழையை வெறுத்தேன்
உன் கண்களில் பார்த்த போது
வார்த்தைகளுக்கு வழி இல்லை ....
பாசத்திற்க்கு பஞ்சம் இல்லை.....
அன்புக்கு அணை இல்லை.....
ஆசைக்கு அளவு இல்லை....
என் சோகத்திட்க்கு குட இடம் இல்லை...
அன்பே என் அருகில் நீ இருந்தால்....
உறவுகள்
இது நம் உறவுகளால் இருக்கலாம்...
நண்பர்களால் இருக்கலாம்...
எதோ ஒரு வகையில் நம்மை தொடரும் உறவுகள்.....
உரிமை சொல்ல உறவுகள் இருந்தாலும்
உள்ளதை புரிந்து கொள்ள உன்னைபோல
ஒரு உயிர் நண்பர் போதும்
Thursday, September 11, 2008
நட்பு...
நட்பு.. Vs காதல்....
நான் இல்லை என்பது காதல்....
யார் இல்லை என்றாலும்
நான் இருப்பேன் என்பது நட்பு...
இதை தான் நான் கற்று கொண்டேன்...
எனது பழய நட்பில்..........
அன்பு
பேசுவது அன்பு அல்ல
அந்த ஒருவரை வேற யாருக்காகவும்
விட்டு கொடுக்காமல் இருப்பது தான்
உண்மையான அன்பு
நண்பர்களிடம் வெறுப்பை காட்ட வேண்டாம்
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்
*******நண்பர்களிடம் வெறுப்பை காட்ட வேண்டாம் *****
உதவுவதும் நண்பனே
உதறுவதும் நண்பனே ....!
Monday, September 8, 2008
Saturday, September 6, 2008
அன்பு நட்பே .....
இருந்தும்...
சுயநலமில்லா உறவு
உங்களுக்காய் காத்திருக்கிறேன்.
தளர்ந்துவிட்ட விரல்களின்
வருடலுக்காய்.
தலைகோதும் தழுவலுக்காய்.
அன்பு நட்பே .....
விட முயற்சி
கரையில் தேடினால்
மீன்கள் தான் கிடைக்கும்
மூழ்கி தேடினால் தான்
முத்து கிடைக்கும்
Thursday, September 4, 2008
நட்பு
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை...
நீயும்
என்னை பார்த்ததில்லை..
நானும்
உன்னை பார்த்ததில்லை...
நீயும்
என்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை..
நானும்
உன்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை...
நீயும்
என் சந்தோஷங்களை கண்டதில்லை..
நானும்
உன் சந்தோஷங்களை கொண்டாடியதில்லை...
நீயும்
என் வருத்தங்களில்
என் கைகளை பிடித்து கொண்டதில்லை..
நானும்
உன் வருத்தங்களில்
உன் கைகளை பிடித்து கொண்டதில்லை...
நீயும்
எந்த மழை நாளிலும்
என்னோடு நடந்ததில்லை..
நானும்
எந்த மழை நாளிலும்
உன்னோடு நடந்ததில்லை...
நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை சொல்லவைக்கும்
ஒரு சின்ன நட்பு மட்டுமே..
அது
நான் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
உன்னையும்,
நீ சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
என்னையும்
நினைத்துக்கொள்ள செய்கிறது...
காதலர்கள் Vs நண்பர்கள்
"காதலர்கள்"
இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள் .........
"நண்பர்கள்"
இயந்திர வாழ்கை
இயந்திர வாழ்வில் புகுந்து..
இயந்திரமாகி போன இளைஞர்களுள் நானும் ஒருவன்....
இது ஒரு விசித்திர உலகம்-அமாம்!
செல்லும் வழியில் இறைவனுக்கு நாகரீக முத்தம் கொடுக்கும் நூதன உலகம்....
கனவு ஒரு அற்புதபடைப்பு...
கனவுகள் இல்லாவிடில் என்றோ-மறைந்து
இருப்பேன் இவ்வுலகை விட்டு....
இன்னும் கனவில் வந்தாடும் ..என்
இனிமையான கடந்த காலம்...
அனைவரும் கடந்துவந்த ஒரு வசந்தகாலம்..
என்னுடைய கண்கள் களவு செய்ய பிறந்தவை....
வானத்து நிலவையும் ஒரு நொடிபொழுதில்!
தன்னுள் மறைத்து கொள்ளும்...
புரிந்து கொள்வதுதான் வாழ்கை .....
விரைவில் இந்த இயந்திர உலகையும் புரிந்து கொள்வேன்...
நண்பனின் உண்மையான பாசம்
திரும்பி பார்க்கும் போதெல்லாம்
அழுகை வருகிறதாம் !!
அன்று முதல் திரும்பி
பார்ப்பதில்லை என
சத்தியம் செய்துவிட்டு
பிறிந்தோம்!
மறையும் கடைசி நொடியில் ....,
நீ பார்க்க மாட்டாயா என நானும் !
நான் பார்க்க மாட்டேன என நீயும் !
ஒன்றாய் திரும்பி பார்க்க பிறகு
வரும் கண்ணீர் துளிகளே !
*****நண்பனின் உண்மையான பாசம் ******
Tuesday, September 2, 2008
மீண்டும் பிறப்பேன் !
“வறுமை தானாகவே மாறும் என்பது
பழைய பொய்.
ஒரு சமூக மாற்றத்தின் மூலமே நிகழும்
என்பதே மெய்.” - மாவீரன் பகத்சிங்
“” அன்பு காட்டுவதாய் நடிக்காதே
அதற்காக அன்பை ஏளனப்படுத்தாதே …
எல்லா விரோதங்களுக்கும்
ஏமாற்றல்களுக்கும்
அப்பால் அன்பு ..”
உலகம் அழகானது அதை ரசி!
காதலித்துப்பார்
உன்னை சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்
உலகம் அர்த்தப்படும்
ராத்திரியின் நீளம்
விளங்கும்
உனக்கும்
கவிதை வரும்
கையெழுத்து
அழகாகும்
தபால்காரன்
தெய்வமாவான்
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்
கண் இரண்டும்
ஒளி கொள்ளும்
கவிதைகள் ஏமாற்றுவதில்லை!
என் காதலை
உன்னிடம் சொல்ல
நான் யாரைத் தூதனுப்ப?
உன் தோழியை…
உன் மேலுள்ளப் பொறாமையில்
அவள் மறுத்து விட்டால்?
அந்த மேகத்தை…
உன்னைச் சேருமுன்னே அது
மழையாய்க் கரைந்து விட்டால்?
இந்தப் பூக்களை…
உன்னை வந்தடையுமுன்னே
அவை வாடி விட்டால்?
அதனால்தான்
என் கவிதைகளை
அனுப்பி வைக்கிறேன்!
அவை கண்டிப்பாய்
உனக்குப் புரிய வைக்கும்…
நான் உன்னைத்தான்
காதலிக்கிறேன் என்பதை!!
ஏனென்றால்
கவிதைகள் ஏமாற்றுவதில்லை!
அவை - உன்னைப் போல!!
காதல்! a நட்பு!
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு ....
கவிதைப் போட்டி
இது கவிதை போட்டியாம்!
வெற்றி பெற வேண்டுமென்றால் உன் பெயரைத்தான்
அனுப்ப வேண்டும்…
சிறியதாக இருக்கிறதென்று ஒதுக்கி விட்டால்?
காதலியைப் பற்றிய கவிதை வேண்டுமாம்…
சிலையைப் பற்றியென்றால் சில நொடியில் எழுதுவேன்…
ஓவியம் பற்றியென்றால் ஒரு நொடி போதும்…
கவிதையைப் பற்றியே கவிதை வேண்டுமென்றால் எப்படி?
சரி எழுதுவோம் என்று உட்கார்ந்தால்
கவிதை வளர்கிறதோ இல்லையோ
உன் மேல் காதல் தான் வளர்கிறது!
உன் அழகைச் சொல்ல ஆரம்பித்தால்
பூக்களின் குறிப்பாகி விடுகிறது…
உன் குரலை வருணித்தால்
இசைக் குறிப்பாகி விடுகிறது…
பின் எப்படிதான்
உன்னைப் பற்றி கவிதை எழுதுவதாம்?
என்ன எழுதினாலும், உன்னுடைய
“அச்சச்சோ!”
…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள் தோற்று விடுகின்றன!
இன்னும் போராடி கவிதையாக,
ஒரு கவிதையெழுதினாலும்
அதை விட கவித்துவமாக நீயே இருக்கிறாய்!
பேசாமல் இந்தக் கவிதைப் போட்டிக்கு
நானனுப்பும் கவிதையாக நீயே போகிறாயா?
வேண்டாம்… வேண்டாம்…
நீ போனால் அப்புறம் அழகிப் போட்டியென்று
நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்!
கவிதைப் போட்டியோ
அழகிப் போட்டியோ
நீ போனால் பரிசு நிச்சயம்…
தோழி
நான் ஏது தவம் செய்தேனோ?
கலகலவென நகைக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?
உனக்குள் இருக்கும் சோகத்தை
எனக்குள் இன்றே புதைத்துவிட்டு
கள்ளமின்றிச் சிரித்திட
உல்லாச வானில் பறந்திடு
உன் இலட்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே விரைந்து புறப்படு
நன்றே நடக்கும் உன்வாழ்வில்
பழையனவற்றை மறந்திடு
புதியதை தேடி விரைந்திடு
சோகத்தை தூக்கி எறிந்திடு
தோழி என் தோளில் தலை சாய்த்திடு
ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே
Monday, September 1, 2008
அன்பு வை
ஆடுகுட்டியை தாலாட்டும் பாட்டியும்
கன்றுகுட்டியை கொஞ்சும் தாத்தாவும்
ஒரு நாளும் படித்ததில்லை
உயிர்கள் இடத்தில் "அன்பு வை" என்று
கைம்பெண்
ஊருக்கெல்லாம்
பூச்சூடிய பூக்காரியின்
கூந்தல் வெருமனாய் இருந்தது
காரணம்
கைம்பெண் என்பதால்
மல்லிகை
நீ
மயக்கும் மோகினி
மலர்களின்
முதல் மந்திரி
ரோஜாவின்
சின்ன சிநேகதி
உன் வியர்வை
இப்படி
மணக்கிறதே
இரும்பு மனிதனையும்
இளக்கி விடும்
உன் வாசனை
மங்கையரின்
மகுடம் நீ
பொன்னை காட்டிலும்
உன்னை தானே
உச்சத்தில் வைக்கிறது
இந்த பெண்கள் உலகம்
தங்கம் காணாத
எம் ஏழை தங்கைக்கு
மச்சமுள்ள தங்கமும் நீ
புகுத்த வீட்டில்
புகழ் மனம் பரப்பும்
பூவே நீ
வெள்ளை மல்லிகையே
உன்னை பார்க்கும் போது
விதவையின் நினைவுகளை
ஞாபகபடுத்துகிறாய்
ஆம்
உன் வாசனை
முன்னாள் தேவதைகளுக்கு
முள்ளாய் குத்துகிறது
காதல்! நட்பு!
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!
என்றும் உங்கள் நல்ல நண்பன்..
சம்மதம்
எம்மதமனாலும் எதிர்க்க தயார்
உன் சம்மதம் மட்டுமே
சண்டித்தனம் செய்கிறது
அம்மா
போனது இல்லை
ஆண்டவனை தொழுதது இல்லை
உலகம் பழிக்கிறது
நான் பதறவில்லை
கையில் வெண்ணையே
வைத்து கொண்டு
நெய்க்கு அலையலாமா
கையூட்டு
உண்மையை காட்டுபவன்
கையூட்டு வாங்கினாலும்
வேறு முகம் காட்டாதவன்
உள்ளதை உள்ளபடி காட்டுவதால்
அரிசந்திரனும் நிலைக்கண்ணாடியும்
ஒன்று தான்
நாகரிகம்
பன்னாட்டு நிறுவனத்தில்
வேலை பார்த்தாலும்
பாதை மாறாதே பெண்ணே
உன் முகம் மறைத்து
மேல்நாட்டு நாகரிகத்தில்
முகம் பார்க்காதே பெண்ணே
உடலும் மனமும் கெட்டு போகும்
உயர்வன் குடி களங்கி போகும்
நாகரிகம் என்ற பெயரில்
கலாச்சார சீர்கேடு வேண்டாமே
Very Nice Song
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் நிலை ஆனேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவெனோ
உந்தன் கரை தொட பிளைத்திடுவெனோ
அலையினலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்
மனதிலே இருப்பதெல்லாம் முனதிலே கலக்கும்
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்
எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க...
கனவே கனவே கண் உறங்காமல்....
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஓஹோஹோஹோ......
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா
அடங்காமலே,அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........
காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே..
ஓஹோஹோஹோ
பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல்தான் வெள்ளம் குறையாது
வருந்தாதே வா
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........
வேண்டாம் அழிவு
நாமம், குல்லா, சிலுவை சின்னங்கள் கூட மூன்றெழுத்து
கோவில், மசூதி, சர்ச் இடங்கள் கூட மூன்றெழுத்து
பின் எதுக்கு
சண்டை, குண்டு, அழிவு என்ற மூன்றெழுத்து வேண்டாம்
அன்பு, அமைதி, உதவி என்ற மூன்றெழுத்து கொண்டு
தேசத்தை காப்போம்
உன் நேசத்தின் அர்த்தம் அறிந்தேன்
என் நட்பெனும் பூந்தோட்டத்தில் பூத்த
என் ஆருயிர் தோழனே !
உறவே இல்லாமல் வந்த நாம்
நட்பென்னும் உறவை பிறப்பித்தோம் !
சின்னசிருவயது முதல் பிரியாமல் !
ஒன்றிணைந்து வளர்ந்த நம் நட்பு
நம் இருவரின் களங்கமற்ற இதயத்தை
காட்டும் நம் கண்ணாடியே நம் நட்பு
என் இன்பத்திலும் , துன்பத்திலும் பங்கெடுக்கும்
பாசத்தால் என்னையும் , என் நட்பையும்
வென்றவன் நீயே நண்பா...
நான் துவண்டு போகும் போதெல்லாம் நீ என்னை அன்பாய் அரவனைத்த்தாய் நண்பா !
அரவணைக்கும் உன்னிடத்தில்தான் !!!!
*****உன் நேசத்தின் அர்த்தம் அறிந்தேன் ***** நண்பா
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"
"அம்மா" என்று அழைக்கும் சுகம்...
"மம்மி" என்றால் கிடைத்துவிடுமோ ??
"மன்னிக்கவும்" என்னும் மெல்லிய மொழியைவிட.
"சாரி" என்பது சரியாகவா உள்ளது ??
"வணக்கம்" என்னும் வண்ண வார்தையை விட
"ஹலோ" என்பது அத்தனை அழகா ?
"நன்றி" என்னும் நயமான பதத்தை விட
"தாங்க்ஸ்" என்பது தரமானா சொல்லா ??
தமிழனே !!!!
நீ அயலானின் ஆங்கில மொழியை "மதிக்க " வேண்டாம் என்று கூறவில்லை..
உன் தாய்மொழியான தமிழை
"மிதிக்க" வேண்டாமே !!
நட்பு காலங்கள்
பள்ளி முடிந்த பின்னும் வீடு திரும்பாமல் ..
நண்பர்களுடன் மாலை ஆறு மணி வரை ..
வியர்க்க வியர்க்க ஓடி பிடித்து விளையாடியபோது வியர்வையை விட ...
<<<<<<<< நம்முடையது நட்பு புனிதமானது >>>>>>>
கல்லூரியில் சேர்ந்தபின் வீடு திரும்ப தாமதமானால்
நண்பன் வீட்டில் நானும் ஒரு பிள்ளையை போல்
தங்கிய போது
********அவர்களின் உயர்ந்த நட்பு எனக்கு பிடித்தது******* .
வேலை தேடி அலையும் போது
ஒன்றாய் சென்று ,
கிடைக்காதா வேலையை திட்டிக்கொண்டு
நண்பர்களுடன் சேர்ந்து சினிமாவிற்கு சென்றபோது
>>>>>>**** என் சுமையாய் தாங்கியது இவர்களின் நட்பு ****<<<<<<
வேலை கிடைத்தும் ஒவ்வொருவரும்
வேறவேறு இடத்திற்கு சென்றப்பின்
வாரம் ஒருமுறை அனுப்பும்
இருவரி ஈ - மைலிலும் ,
நண்பர்களுக்கும் கொடுக்கும் MISSed call மாக மாறி போனது
>>>**<<< நம்முடைய நட்பு <<<***>>>>
<&&&****>>> வாழ்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ வைப்பதில் தான் உள்ளது *****<<<<<<
"உன் கோபம் உன்னை நேசிபவர்களை வெறுக்க வைக்கும்
ஆனால் உன் அன்பு வெறுப்பவர்களை நேசிக்க வைக்கும்"
என்ன தவம்
நீங்கள் எனக்கு நண்பனாக கிடைத்தற்கு ..
நான் என்ன தவம் செய்தனோ !
கல கல என சிரிக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா !
உனக்குள் இருக்கும் சோகத்தை
என்னுள் இன்றே புதைத்து விடு
கலக்கமின்றி சிரித்து வாழ உல்லாச வானில் உங்கள் சோகம்
பறந்திட !
உன் லச்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே விரைந்து புறப்பட்டு
***** நன்றே நடக்கும் உன் வாழ்வில் !*****
பலயனவ்றை மறக்காமல்
புதியதை தேடி விரைந்திடு
ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என்று கவலை படாதே !
****உன் நட்பினில் கலந்திருப்பின் உனக்கு துணையாக!**
இதயத்தின் எதிரி
ஏன் என்றால் !...
இதயம் எல்லாவற்றையும் மறைத்துவிடும் (உன்னைபோல)
ஆனால் கண்கள் எல்லாவற்றையும் காட்டிவிடும்
உங்களை போல நல்ல இதயம் உள்ள நண்பனே எனக்கு வழிகாட்டி
""""நட்பு பொக்கிஷம் போன்றது """"
இழந்தால்
"""உனக்கு இன்னொரு எதிரி """உருவானதா நினைத்துக் கொள் .
நண்பனே நேசிக்கிறேன்
கவிதையிலே உன்னை இவ்வளவு நேசிக்கிறேன் !
ஒரு வேலை நிஜத்தில் நீ எனக்கு கிடைத்திருந்தால் !
உன்னை எப்படியெல்லாம் நேசித்து இருப்பேன்
என் கேள்விகளோடு போய் விடுகிறது !
என் காலம்
பதில் தெரியாமல் .....
காதலும், நட்பும்
இந்த வாழ்க்கையில்...
காதலும், நட்பும்
இரு கவிதைகள் .
அதில்
அன்பான காதலை நேசிப்போம் ...
அழகான நட்பை சுவாசிப்போம் ...!
நட்பிற்காக காத்திருப்பேன்
தொட்டுபோனோ உன் நட்பு !..
காத்திருக்கும் என் கனவுக்குள்
பூத்திருக்கும் உன் நினைவுகள்
உங்களின் நட்பிற்காக எந்நாளும்
காத்திருப்பேன் !.....
இனிய நாளாக
நம் கடக்க பாதைகளும் ! நம்மை மீறி செல்லுகின்றது
" கடக்கும் ஒவ்வொரு நொடிகளும்
நம்மை பற்றி பேசவேண்டும் !..
நண்பரே !...
ஆகையால் நாம் வாழும் வாழ்க்கைக்கு
ஒரு அர்த்தம் வேண்டும்
இப்படித்தான் வாழவேண்டும்
என்று வாழாமல் நாம் நம் வாழ்வதற்கு
ஏற்ப சூழ்நிலையை உருவாக்குவோம்
*****என் அன்பு நண்பருக்கு மாலை வணக்கம் ****
இந்நாள் இனிய நாளாக தங்களை வாழ்த்துகிறேன்
Very Nice Song From Subramaniyapuram
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்
பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றிக்
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
சரணம் 1:
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்
சரணம் 2:
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொல்லாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு
ஒரு நட்பு...
ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...
நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்