Friday, January 23, 2009

!!!!!!!!!*******அன்பு ******!!!!!!!!!!!


பார்த்து கொண்டிருக்கும்
நிமிடங்களை விட
நினைத்து கொண்டிருக்கும்
நிமிடங்களில் தான்
அன்பு அதிகமாக இருக்கும்

Thursday, January 22, 2009

!!!--உன்னை வெட்கப்படுத்துகிறேன்--!!


ஏற்கனவே அழகாக
இருக்கும் உன்னை
மேலும் அழகாகக்கத்தான்
உன்னை வெட்கப்படுத்துகிறேன்
தெரியுமா..?

Wednesday, January 21, 2009

!!** வலி **!!



பேச யாருமில்லாத போது
நினைவுகளே துனையாகி
வலிகளைச் சுமக்கின்றேன்...

Tuesday, January 20, 2009

அழகாய்!!


உலகத்தில் மிகவும் உபயோகமற்ற செயல்
எது தெரியுமா?
உன்னை விடவும் அழகாய்
ஒருத்தியை தேட முயற்ச்சிப்பதுதான்।

உன் நெற்றி பொட்டாக!!!!!!!!!!!!!!!


உன் நெற்றிக்குகாக
ஆயிரம் நட்சத்திரங்கள்
தவம் கிடக்கின்றன
வானத்தில்
உன் நெற்றி பொட்டாக
வருவேன் என்று.................

மழை மேகமா!!!!!!!!!!!


நீ என்ன மழை மேகமா
உன்னுள் சிதறி கிடக்கின்ற
தண்ணீர் துளிகளை
ஒன்றாக்கி மழை தருவது போல்
என்னுள் சிதறிக்கிடந்த
வார்த்தைகளை ஒன்றாக்கி
கவிதை தந்தாயே......

Monday, January 19, 2009

@@@--!!!வெட்கம்!!!--@@


நான் பார்க்கும்போது வெளிப்படும்
வெட்கங்களையும் மற்றவைகளையும்
நீ மறைக்கபடும் பாடு இருக்கிறதே
உன் வெட்கங்களைவிட
அவை மிக அழகாக இருக்கின்றன
...

Sunday, January 18, 2009

தோட்டத்தில் மொட்டுக்ளாய்!!!!!!!!!!!!


என் நினைவு என்னும் தோட்டத்தில்
மொட்டுக்ளாய் காத்துகிடக்கின்றன
என் கவிதைகள்
உன் வாசிப்பில் மலர்வேன் என்று....

Saturday, January 17, 2009

அழுகுரல்!!


கேட்கிறது
குழந்தையின் அழுகுரல்!!
பார்க்கும்
மனது பதறுகிறது!!
தொலைக்காட்சி பெட்டி!!

Friday, January 16, 2009

காதணிகள்


உன் காதுகளும்
கதை சொல்லுமோ?
காதணிகள்
தலையசைக்கின்றனவே!

Thursday, January 15, 2009

ஆசைப்படவில்லை!!!!!!!!!!!!!!


நான் அரியாசனம் ஏற
ஆசைப்படவில்லை
வரலாற்றில் இடம் கேட்டும்
வருத்தப்படவில்லை
நான் கேட்கும் இடம்மெல்லாம்
உன் இதயத்தின் ஒரு ஓரம் தான்...

Wednesday, January 14, 2009

ஒன்றும் தெரியாது!!!!!!!!!!!!!


நீ விரும்பும் உயிருக்கு
உன் அன்பு புரியாது.
உன்னை விரும்பும் உயிருக்கு
உன்னை தவிர வேற
ஒன்றும் தெரியாது ......

Tuesday, January 13, 2009

***தோழியே ஆசையடி****


தோழியே உன் தோழோடு
தோள் சாய்ந்து நிலவின் ஒளியில்
உன் செல்லச் சிரிப்போடு
இரண்டறக் கலந்திட
ஆசையடி

Monday, January 12, 2009

!!** நினைவுகள் **!!


விழித்திருக்கையில் தென்றலாய்
தழுவி உறங்குகையில்
கனவென மாறி
என்னை அணைத்திடும்
உன் நினைவுள்....!!

Sunday, January 11, 2009

ஓவியம்!!!!!!!!!!!!!



மணல் ஓவியங்கள் -
மண் மீது படியும்
உன் கால்தடங்கள்

Saturday, January 10, 2009

காதல் புனிதமானதே!!!!!!!!!!!!!!


என் ஆவி பிரியும்
முன் நொடியில் சொன்னாலும்
உள்ளம் புரிந்து வரும்
உன் காதல் புனிதமானதே!!!!!

Friday, January 9, 2009

நிரப்ப நினைக்கிறேன்!!!!!!!!!!!!


என் கவிதையெனும்
சிறுதுளியால் நான்
நிரப்ப நினைக்கிறேன்
கடலெனும் உங்கள் மனதை!!!!!!

Thursday, January 8, 2009

உருவத்தை மறக்க முடியவில்லை!!!!!!!!!!!!



உருவத்தை பார்த்த அவள்
என் உள்ளத்தை பார்க்க
மறந்து விட்டாள்
அவள் உள்ளத்தை பார்த்த
என்னால் அவள் உருவத்தை
மறக்க முடியவில்லை.....

Wednesday, January 7, 2009

உன் கொலுசு ஓசையே

எனக்கு பிடிக்கும் கோவில்
மணியோசையைவிட
உன் கொலுசு ஓசையே
எனக்கு பிடிக்க்கும்
சம்பிரதாயங்கள் இல்லாத
சத்தம் அது

Tuesday, January 6, 2009

என் உயிரை எடுக்கும் உரிமை!!!!!!!!!!!!

எமனுக்கு தான்
என் உயிரை
எடுக்கும் உரிமை
என்று நான்
நினைத்து இருந்தேன்
உன் கண்களை
பார்க்கும் முன்பு வரை!!

Monday, January 5, 2009

காதலும் கவிதையும் இல்லையென்றால்!!!!


காதலும் கவிதையும்
இல்லையென்றால்
இந்த பூமிப்பந்து என்றோ
வெறி பிடித்த
மனித மிருகங்களால்
சிதைக்க பட்டிருக்கும்.....

Sunday, January 4, 2009

கவிதை நினைக்கும் போது!!!!!!!!!!!!


கண்களை முடிக்கொண்டு
கவிதை பற்றி நினைக்கும் போது…
கண்முன் வருவது கவிதையல்ல….
உன் முகம் தான்…

Saturday, January 3, 2009

காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை....


காதல் இல்லாமல்
வாழ்கையில்
சுவாரஸ்சம் இல்லைத்தான்
ஆனால்-காதல் மட்டுமே
வாழ்க்கை இல்லை....

Friday, January 2, 2009

காதல் பரீட்சை....


தோற்றுப்போய்
விடுவேனோ
எனப் பயந்தே
காதல் பரீட்சையை
எழுத விரும்பவில்லை..

காதல் ஒன்றும் பரீட்சையல்ல



தோற்று போவதற்கு
காதல் ஒன்றும் பரீட்சையல்ல...
ஒருமித்த- இரு இதயங்களின்
சங்கீத பாஷை !

Thursday, January 1, 2009

ஒற்றை ரோஜா


நீ
முதன் முதலாய்
நீட்டிய ஒற்றை ரோஜா
எனக்கு அறிமுகப்படுத்தியது
காதலை மட்டுமல்ல
என்னையும் தான்....