Friday, December 5, 2008

தொலைந்து போன தோழி....


என்னை நாபகம் இருக்குதோ இல்லையோ தோழி !
உருண்டோடும் காலத்தில்
உருக்குலைந்து போனவர்களோ நாம் ?
அருகருகே பிறந்து அரும்பாய் வளர்ந்து
ஆசைகள் உற்றி

எது நட்பென்று அறியாமல்
எனக்காய் நீ காத்திருந்து
உனக்காய் நான் காத்திருந்து
பேசி விளையாடிய தெல்லாம்
தொலைத்து விட்டோமா ?

பள்ளி வரை படித்து......
கல்லூரி நீ எங்கோ , நான் எங்கோ ...
இப்படியே தொலைந்தோம்....

நான் இப்போ வேலையில்
இங்கு நரகம் என்னும் நரகத்தில்
சிறு இடைவேலையில்

உன் ஞாபகமாய் நான் ....
ஆனால் நீ எங்கோ தோழி....