Tuesday, November 25, 2008

வைர மூக்குத்தி!


பகலில் கூட
மின்னலைப் பார்கிறேன்!!
அட,
உன் மூக்கின்
வைர மூக்குத்தி!

ரசனை


முழு நிலவையும்,
நட்சத்திரங்களையும்
ரசிக்க யார் யாரோ இருக்கிறார்கள்.
என் தேவதை நீயிருக்க,
வேறு எதை பார்த்து
நான் ரசிப்பது?

யாரிது?


எவ்வளவு நேரம்
பார்த்துக் கொண்டிருந்தாலும்
பேசவில்லையே!!
அட...
இது நீ அல்ல‌
வெறும் பூவா!!

நிழலைப் போல


எங்கு சென்றாலும்
இடைவிடாமல் தொடர்கிறது
உன் காதல்
என்னோடு விலகி
நிற்கும் நிழலைப் போல

சிறை எடுக்க !!!


பெரும் படை எதற்கு..
பெண்ணே ...
உன் சிலை பொதும் -
எனை சிறை எடுக்க..,

மோகம்


எண்ணவளின் விழி பேசும் வார்தைகளை ..,
கேட்க வேண்டும் ***
ஏதேனும் தொலைபேசி உள்ளதா ???

குமுறல்


இதயம் படைக்கப்பட்ட மனிதனாய் பிறந்தேன் ..,
சமயம் சபிக்கப்பட்ட காதலில் விழுந்தேன் ..,
இவ்விதிக்கப்பட்ட வாழ்வை பிறக்கும் போதே
உணர்ந்திருந்தால்
இறந்தே பிறந்திருப்பேன் நான் !!
இறந்தே பிறந்திருப்பேன் நான் !!