Wednesday, September 17, 2008

தாஜ்மஹால்


காதல் இன்றி வாழ்ந்தால் கோவிலும் கல்லறைதான்.......
காதலில் ஒருத்தி தூங்குவதால் ஒரு கல்லறையும்.......
கோவில் தான்
"தாஜ்மஹால்"

நிறுத்தப்பட்ட சிறுமி படிப்பு

இடையில்
படிப்பு
நிறுத்தப்பட்ட
சிறுமி பார்க்கிறாள்
பள்ளியை...

வெட்டப்பட்ட
கிளையொன்று
மரத்தின் பசுமையை
பார்ப்பதைப் போல...

வறுமை


வாழ்க்கையின் ஓட்டத்தினிலே ....
பயணப்பட்டேன் நானும் ...
பயன் பெறலாம் என்று...அந்த
பயன் சுவையாக இருக்குமென்று நினைத்தேன்...ஆனால்
சுமையாக அமைந்து விட்டதே ......வறுமை காரணமானதாலா?

சந்தோசம்

துவண்டுவிழும் ..
துன்பங்களுக்கிடையே ,
வரும் "சந்தோசம் "
என்றால் .....
நட்பே ....அது உன் மறு பெயரா ....?