Friday, April 17, 2009

நான் ஊமை


உன்னுடன் பேச முடியாத நேரத்தில்
நினைத்து கொள்வேன்
நான் ஊமை என்று
ஏக்கத்தில்......

Tuesday, April 14, 2009

நிஜம் நிழலாகி!!!!


நிஜத்திற்க்கும் நிழலிற்க்கும்
வித்தியாசம் தெரியவில்லை – எனக்கு
காரணம் சிலசமயம் நிஜம் கூட
நிழலாகி போவதனால்...!

Monday, April 13, 2009

குழந்தையின் முத்தமே

சிவந்து சரியும்
கோப முகத்தையும்....,
கனத்து கதறும்
சோக மனதயும்.-மாற்றும் மருந்து
குழந்தையின் முத்தமே!!!!

Wednesday, April 1, 2009

முட்டிய வெடிப்பிது

இதயம் வெடித்த வடிவம்
இரு முகம்போல் தெரிகிறதே
கவிதை வடித்த விதமோ
பல கருத்தை தருகிறதே
முட்டாள் தினத்தில்-ஒரு
முத்தான கவிதை- தமிழ்
அடுக்கு வரிகளில் அமைந்ததன்றோ.