Wednesday, September 24, 2008

கவிதைகள் அனைத்தும் அருமை

ஓர் அனுமதி கொடு.....!
**************************
நீ விலகி செல்கிறாய்
ஓர் அனுமதி கொடு
உன் நிழலாவது
என் மீது விழட்டும்..!

தேடினேன்....!
*******************
உன்னை தேடினேன்
கண்டு பிடித்தேன்
அடுத்தவனின் மணமாலைக்குள்
அகப்பட்டவளாய்.....!

விழுந்தது எப்போது...!
***************************
எனது தெருப்பள்ளங்களை
கடந்து சென்ற நான்
உன் இதயக்குழியில்
விழுந்தது எப்போது...!

முத்தம்.........!
*********************
அவளின் உதட்டு ஈரம்
அச்சனது - என்
இதழில் அல்ல
என் இதயத்தில்....!


காதல் என்றால்.....!
**************************
சூரியன் என்றால்
உதிப்பதும், மறைவதும்..!
நிலவு என்றால்
இரவு, குளிர்ச்சியும்...!
கவிதை என்றால்
வார்த்தையும், வாழ்க்கையும்..!
காதல் என்றால்
எமாற்றுவதும்
ஏமாறுவதும் தானோ...!

உனக்காக....!
*********************
உனக்காக பல
பழக்கங்களை விட்டுக்கொடுத்த - நான்
இப்போது என்னையும் விட்டு
கொடுக்கிறேன் உனக்காக...!

கவிதை வற்றாது...
*********************
சூரியன் உள்ளவரை
பகல் வற்றாது!
நிலவு உள்ளவரை
இரவு வற்றாது!
வானம் உள்ளவரை
பூமி வற்றாது!
காலம் உள்ளவரை
காதல் வற்றாது!
காதல் உள்ளவரை
கவிதை வற்றாது...!

மரணம்...!
***********************
சில நிமிடம்
இதயம் நின்றுவிடுகிறது
நீ - மற்றவர்களிடம்
விளையாடும் போது....!

பொறுமை..!
*******************
பெண்ணே
உனக்கு இவ்வளவு
பொறுமை கூடாது! - உன்
காதல் கடிதத்தை
என் கல்லறைக்கா
கொண்டு வருவது....!

நினைவு தடங்கள்...!
************************
கடற்க்கரையில் உள்ள - நமது கால் தடங்களை
அழிக்க போராடி கொண்டிருக்கிறது
கடல் அலை..!
அதற்க்கு ஏப்படி தெரியும் அவை
கால் தடம் இல்லை - நம்முடைய
நினைவு தடம் என்று..!

கள்ள சிரிப்பு


கடைசி ஆசை....
******************
கல்லறை போகும் முன்
என்னவளிடம்
கேட்டு சொல்லுங்கள் - அந்த
கள்ள சிரிப்புக்கு
அர்த்தம் என்னவென்று..!

ஊமை


ஊமை
-----------------
உன் மௌனங்கள் தான் ,
என்னை பேச்சாளனாக்கியது.!

என்ன பயன்.?

உன் அருகில் வருகையில்,
ஊமையாகி விடுகிறேனே.............



ஊமையாக்கி விட்டாய்....!
*****************************
ஓரே வார்த்தையில்
என்னை ஊமையாக்கி விட்டாய்....
உன்னிடம்
பேசவில்லை என்று...!