Monday, November 10, 2008

எப்போதடா வருவாய்.......??


காலைப்
பனித்துளியாய்
நான்
முயலாய்
எனைக் குடிக்க.....!!

*
காற்று தொடாத
மூங்கிலாய்
நான்
புல்லாங்குழலாய்
எனை மாற்ற......!!

*
பாதம் படாத
புல்வெளியாய்
நான்
என்னில்
மழையாய் பொழிய......!!

*
வளராத
நிலவாய்
நான்
என்னை
பௌர்ணமியாய்
ஒளிரச்செய்ய......!!

*

சிப்பி தொடாத
மழைத்துளியாய்
நான்
என்னை
முத்தாக்க.......!!

*

பறக்கத்துடிக்கும்
புறாவாக
நான்
என்
சிறகைக் கோதிவிட......!!

*

நானாகவே
இன்னும்
நான்
என்னில்
உன்னை
இட்டு நிரப்ப
எப்போதடா வருவாய்.......??

**