Thursday, September 18, 2008

கவிதை அருமை. அருமையான வரிகள்

இரவில் தூங்கப் போகும்போது
தோடுகளையும், வளையல்களையும்
கழற்றி வைப்பதை போல்
உன் சிறகுகளை
எங்கே கழற்றி வைப்பாய்
*****************************************
புல்லின் மீதிருக்கும் பனித்துளியை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
உன் ஈரம் படிந்த இதழ்களை
*****************************************
கொஞ்ச நேரம் பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!
*****************************************
தனியே நீ முணுமுணுக்கும் இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில் இனிமை இழப்பதேன்?
*****************************************
என் மனம் அழும் வேளையில்
உள் இருக்கும் நீ நனைவாய் என்று தயக்கம்

No comments: