Monday, September 1, 2008

மல்லிகை

மல்லிகையே
நீ
மயக்கும் மோகினி

மலர்களின்
முதல் மந்திரி

ரோஜாவின்
சின்ன சிநேகதி

உன் வியர்வை
இப்படி
மணக்கிறதே

இரும்பு மனிதனையும்
இளக்கி விடும்
உன் வாசனை

மங்கையரின்
மகுடம் நீ

பொன்னை காட்டிலும்
உன்னை தானே
உச்சத்தில் வைக்கிறது
இந்த பெண்கள் உலகம்

தங்கம் காணாத
எம் ஏழை தங்கைக்கு
மச்சமுள்ள தங்கமும் நீ

புகுத்த வீட்டில்
புகழ் மனம் பரப்பும்
பூவே நீ

வெள்ளை மல்லிகையே
உன்னை பார்க்கும் போது
விதவையின் நினைவுகளை
ஞாபகபடுத்துகிறாய்

ஆம்
உன் வாசனை
முன்னாள் தேவதைகளுக்கு
முள்ளாய் குத்துகிறது

No comments: